அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து......


மன்னார் சங்குப்பிட்டி பிரதான வீதியில் மாந்தை பிரதேசத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் வீதியின் அருகில் நின்ற தென்னைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் அறியவருவது  மன்னார் பேசாலையை பிறப்பிடமாக கொண்ட அமலமரித்தியாகிகள்-OMA சபையைச்சேர்ந்த  அருட் தந்தை  செலஸ்ரின் மஸ்கிரிஞ்ஞ அவர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் மறைபணியாற்றுகின்றார்.
இன்று பணியின் நிமித்தம் மன்னாருக்கு  வரும் வேளையில் பயணித்த டொல்பின் வாகனமே 19-05-2018 இன்று மதியம் 12- 40 மணியளவில்விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் அருட்தந்தை அவர்கள் கண்ணயர்ந்திருக்கலாம் என சந்தேகம்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 அருட்தந்தை அவர்கள் தற்போது மன்னார் பொதுவைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-Mannaaraan- 






மன்னார் பாப்பாமோட்டை பகுதியில் டொல்பின் வாகனம் விபத்து...... Reviewed by Author on May 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.