அண்மைய செய்திகள்

recent
-

கருணாவின் சொந்த ஊரில்! கருணாவை திட்டி தீர்த்து விண்ணதிர ஓலமிட்ட தமிழ் உறவுகள் -


ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிரான் விஸ்ணு ஆலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தலில் கலந்து கொண்ட உறவினர்கள் உயிர் நீர்த்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு அழும் காட்சி கலந்து கொண்டவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. இதன்போது, எமது உறவுகளை அழித்த அரசாங்கத்திற்கு தண்டனை வழங்குவதற்கு இறைவன் துணை புரிய வேண்டுமென வேண்டி ஆலய முன்றலில் கதறியழுதுள்ளனர்.

முள்ளிவாய்காலில் உயிர் நீத்த தங்கள் உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் தீபச்சுடர் ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளர், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருணாவின் சொந்த ஊரில்! கருணாவை திட்டி தீர்த்து விண்ணதிர ஓலமிட்ட தமிழ் உறவுகள் - Reviewed by Author on May 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.