அண்மைய செய்திகள்

recent
-

கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு முயற்சி...முறியடிப்பு...சாள்ஸ் நிர்மலநாதன் mp


மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு எடுத்த முயற்சியை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முறியடித்துள்ளார்.

நேற்றைய தினம் முசலி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது.இக் கூடத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டது.
1984ம் ஆண்டு கொக்குப்புடையன் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட அனுமதிப்பத்திர காணிகளை 2012ம் ஆண்டு அரசியல் வாதிகளின் துணையுடன் சேவியர் திணைக்களத்தினர் சிலாவத்துறை மக்களுக்கு பிரித்து கொடுத்தனர்.

கடந்த 13.04.2018 அன்று அக் காணிக்குள் தற்போது காணி வழங்கப்பட்டுள்ள சிலாவத்துறை மக்களுக்கு வீடுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்வு நடந்தபோது உடனடியாக அவ் இடத்துக்கு சென்று அந் நிகழ்வை தடுத்து நிறுத்தினார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
முறையற்ற விதத்தில் பெறப்பட்ட இக் காணியை மத்திய,மாகாண காணி ஆணையாளரின் அனுமதியை பெற்று மீள கொக்குப்புடையான் மக்களுக்கு வழங்குவதற்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கொண்டுவந்தார்.
இத் தீர்மானத்தை அமைச்சர் ரிஷாத் பதியூன் தான் எதிர்பதாகவும்.இக் காணிகள் சிலாவத்துறை மக்களுக்கு உரித்தான காணிகள் என்றும் குறிப்பிட்டதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

உடனடியாக பிரதேச செயலாளருடன் அவ் இடத்துக்கு சென்று நிலைமைகளை பார்வையிடப்பட்டதுடன் மதிய,மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனைகள் பெற்று முடிவெடுப்பது என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கொக்குப்புடையான் மக்கள் காலகாலமாக இக் காணிகளுக்குள் பயிர்கள் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தகதாகும்.





கொக்குப்புடையான் மக்களுக்கு சொந்தமான காணியை சிலாவத்துறை மக்களுக்கு வழங்குவதற்கு முயற்சி...முறியடிப்பு...சாள்ஸ் நிர்மலநாதன் mp Reviewed by Author on May 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.