அண்மைய செய்திகள்

recent
-

உலகமே எதிர்பார்க்கும் டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தை: தென்கொரிய ஜனாதிபதியும் பங்கேற்பு -


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரின் பேச்சுவார்த்தையில், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-யும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இருவரும் சிங்கப்பூரில் வருகிற 12ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்க, வடகொரிய வெளியுறவுத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பதிவில் கூறுகையில்,
‘அமெரிக்க குழுவினர் வடகொரியா சென்றுள்ளனர். வரும் காலத்தில் வடகொரியா மிகச்சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்கொரிய வெளியுறவு துறை மூத்த அதிகாரி சியோங் வா டே கூறுகையில், ‘டிரம்ப், கிம் சந்திப்பின்போது தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 தலைவர்களும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்க்கும் டிரம்ப்- கிம் பேச்சுவார்த்தை: தென்கொரிய ஜனாதிபதியும் பங்கேற்பு - Reviewed by Author on May 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.