அண்மைய செய்திகள்

recent
-

2,000 குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிப்பு! அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை -


மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருபவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பெரியவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுடன் வரும் குழந்தைகள் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து பிரிக்கப்படுகின்றனர்
அவர்கள், ஆதரவற்றவர்களாக வகைப்படுத்துப்படுகின்றனர்.

இந்த குழந்தைகள் அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் பராமரிப்புக்கு மாற்றப்பட்டு, அரசு தடுப்பு முகாம்களுக்கும், குழந்தை வளர்ப்பு மையங்களுக்கும் மாற்றப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் திகதி துவங்கி, மே 31-ஆம் திகதி வரை சுமார் 1,995-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் தனிமைபடுத்தப்படுவதால், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
2,000 குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிப்பு! அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை - Reviewed by Author on June 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.