அண்மைய செய்திகள்

recent
-

சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தலையில் சிறு ஓட்டைகளுடன் மண்டையோடுகள்....


மன்னார் நகர நுழைவாயிலில்   உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்பு அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வளாகத்தினுள் மீட்கப்பட்ட சில மண்டையோடுகளில் சிதைவு மற்றும் துளைகல் காணப்பட்டமை அநோகமானவர்களினால் அவதானிக்கப்பட்டது
இந்த நிலையில்  லங்கா சதோச வளாகத்தினுள் ஊடகவியளாலர்களுடன் சிறு கலந்துரையாடல் இடம் பெற்றது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் அகழ்வு பணிகள் தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது.

  இவ் கலந்துரையாடலில் ஊடகவியளாலர்களினால் அநேகமான கேள்விகள் கேட்கப்பட்ட போதும் அநோகமான கேள்விகளுக்கு தங்களால் தற்போது பதில் வழங்க முடியாது எனவும் அனைத்து அகழ்வுபணிகளும் நிறைவடைந்து விஞ்ஞான முறையிலான பகுப்பாய்வு பணிகள் இடம் பெற்ற பின்னரே பதில் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட அநோகமான மண்டையோடுகளில் துளைகள் மற்றும் சிதைவுகள் காணப்படுகின்றன அவ் துளைகள் அகழப்பட்டபோது இயற்கையாக காணப்பட்டதா அல்லது அகழ்வு பணிகளின் போது ஏற்பட்ட துளையா.... என வினவப்பட்டது
குறித்த கேள்விக்கு பதில் வழங்கிய விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ இவ் வளாகத்தினுள் இரண்டு பிரிவான மனித மண்டையோடுகள் மீட்கப்படுவதாகவும் சில மனித எச்சங்கள் முதிர்வு அடைந்த எச்சங்கள் எனவும் சில மனித எச்சங்கள் முதிர்சி அடையாத மனித எச்சங்கள் எனவும் அவ்வாறு அகழ்ந்தோடுக்கப்படும் முதிர்சியடைந்த எச்சங்கள் அகழ்வு பணிகளில் சிதைவடைகின்றது எனவும் தெரிவித்துள்ளார் ஆனாலும் சொல்லி வைத்தாற்போல் அநோக மண்டையோடுகளின் தலை பகுதி சிதைவடைந்திருப்பது சந்தோகத்தை ஏற்டுத்துகின்றது.

அத்துடன்  கடந்த அகழ்வின் போது குறித்த மனித எச்சங்களுக்கு அருகில் இருந்து துருப்பிடித்த உலோக பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இதுவரை லங்காசதோசா வளாகத்தின்  நன்கின் ஒரு பகுதியிலே கிட்டத்தட்ட அகழ்வின்மூலம் கண்டறியப்பட்ட மண்டையோடுகள் 30இருக்கின்றபோதும் இன்னும் முழுமையான அகழ்வு பணிகள் இடம்பெறும் .



சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தலையில் சிறு ஓட்டைகளுடன் மண்டையோடுகள்.... Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.