அண்மைய செய்திகள்

recent
-

தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்-விளைவு விபரீதமாகும்......




மன்னார் ஊடகவியலாளர் அமையம் 


கடந்த சில மாதங்களாக முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அசுறுத்தலுக்கு உள்ளாக்க்படுவது தொடர்கதையாகியுள்ளது
யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கபட்டுள்ளனர் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்திலும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான ஊடக சுகந்திரம் வழங்கப்படவில்லை அண்மையில் முல்லைதீவை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்கள் ராணுவத்தால் புலனாய்வு துறையினரால் தனியார் நிறுவனத்திறனால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் முல்லைதீவில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் ஊடகவியலாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அச்சுறத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பட்ச்சத்தில் ஒட்டு மொத்த தமிழ் ஊடகவியலாளர்களும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைவரும் எனவே இதுவரை அச்சுறுத்தப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மேல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் சுகந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்க்கு அப்பால் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர் மாறான விளைவுகள் ஏற்படாமல் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்து கொள்கின்றோம் .

                                                                            -நன்றி-
        ஊடகவியலாளர்கள்
ஊடகவியலாளர் அமையம் 
                   மன்னார்.


தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்கள்-விளைவு விபரீதமாகும்...... Reviewed by Author on June 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.