அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து.....ஒருவர் பலி...


மன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து  26-06-2018 இரவு 8-30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

 விபத்து தொடர்பாக  மேலும் அறியவருவது  தாழ்புபாட்டில் இருந்து  மன்னார் நோக்கி  துவிச்சக்கர பயணித்த  நபர் மன்னாரில் இருந்து தாழ்புபாடு நோக்கி (செல்வ நகர் சந்தி குளத்தடி பகுதியில் வைத்து )பயணித்த பேரூந்தில் மோதியதால்  தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறியதால் உயிரிழ்ந்துள்ளார்.

மன்னார் பொதுவைத்திய சாலையில் நபரின் உடலம் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு  வருகின்றனர்
பேரூந்து சாரதி இன்று 27-06 - 2018 அதிகாலையில் பொலிசில் சரணடைந்துள்ளார்.

மக்களின் கருத்து
இவ்வீதியின் வளைவில் விபத்துக்கள்  அதிகம் நடைபெறுகின்றது.
வேகமாகத்தான் இவ்விடங்களில் வாகனங்கள் செல்லுகின்றது.
போக்குவரத்து பொலிசார் இவ்விடத்திற்கு வருவதில்லை.

 மேலதிக விசாரனைகள் ............









மன்னார் தாழ்புபாடு பிரதான வீதியில் விபத்து.....ஒருவர் பலி... Reviewed by Author on June 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.