மன்னார் பொது வைத்தியசாலையில் மக்கள் ஒத்துழைப்பில் சிரமதானம்
மன்னார் மக்கள் பரிந்துரை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான பணிகள்
மன்னார் மக்கள் பரிந்துரை இயக்க அங்கத்தவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் ஒத்துழைப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையில் 23-06-2018 இடம் பெற்றது
மன்னார் மக்கள் பரிந்துரை இயக்கத்தின் தலைமயில் மன்னார்
வைத்தியசாலையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவின் அருகில் உள்ள அணைத்து பகுதிகளும் துப்பரவு செய்யப்பட்டுள்ளது
இன்று23 மதியம் 3.00- 5.30. வரை இவ் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது
பொது வைத்திய சாலையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த புதர்களாகவும் குப்பைகளாலும் நிறைந்து காணப்பட்டமையை தொடர்ந்து குறித்த துப்பரவு பணியானது மேற்கொள்ளப்பட்டது.
இவ் பணிகளில் சாந்திபுரம். பெரியகமம். தரவன்கோட்டை. தோட்டக்காடு. எழுத்தூர். ஆகிய கிராமங்களை சேர்ந்த 100க்கு மேற்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் சிரமதான வேலைகள் இடம் பெற்றது.
சிரமதான இறுதியில் மன்னார் மக்கள் பரிந்துரை இயக்கம் சார்பாக வைத்தியசாலையின் சிறுவர் பிரிவின் சிகிச்சை பெரும் சிறுவர்களின் பாவனைக்காக ஒரு சலவை இயந்திம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறிப்பிட தக்கது. .
மன்னார் பொது வைத்தியசாலையில் மக்கள் ஒத்துழைப்பில் சிரமதானம்
Reviewed by Author
on
June 24, 2018
Rating:
No comments:
Post a Comment