அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு..கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல்


நானாட்டான் பிரதேசபை அமர்வில் கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் நிலையத்தில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மன்னார் நானாட்டான் பிரதேசசபையின் நான்காவது அமர்வு கடந்த  20 செவ்வாய்கிழமை இடம் பெற்றது குறித்த அமர்வில் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தான்தோன்றித்தனமாத உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது எடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் தெரிவித்ததையடுத்து பிரதேச சபை அமர்வில்  அமைதியின்மை ஏற்பட்டது.

 தொடர்ந்தும் பேச முற்பட்டபோது கூட்டமைப்பின் உறுப்பினர்களால் இடையூறு வழங்கப்பட்டதை தொடர்து அமைதியின்மையானது கைகலப்பாகியது
அதனை தொடர்ந்து அங்கிருந்த எனைய உறுப்பினர்களால் சன்டையானது நிறுத்தப்பட்டது தொடர்ச்சியாக அமர்வை நடத்த முடியாமையினால் முடிவு ஏதும் இன்றி கூட்டம் முடிவுருத்தப்பட்டது குறித்த அமர்வு இடம் பெற்று கொண்டிருந்த நிலையில் ஊடகவியளாலர்கள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் முன்னிலையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எனவே தன்னை அச்சுறுத்தியமை தொடர்பாக மன்னார் பொலிஸ் அத்தியகட்சகர் நிலையத்திலும் முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் நீதி கோரி முறைப்பாடு செய்துள்ளதாக இவ் சம்பவதில் பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினரான ஞானபிரகாசம் மரியசீலன் தெரிவித்தார்.


பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு..கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் Reviewed by Author on June 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.