கிம்-டிரம்ப் சந்திப்பிற்கு சிங்கப்பூர் செலவிடும் தொகை எவ்வளவு....
சிங்கப்பூரில் எதிர்வரும் 12-ஆம் திகதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் முதன் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் அரசு சுமார் 20 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக அந்த நாட்டின் முதலமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த தொகையனது சர்வதேச சமூகத்திற்காக விருப்பப்பட்டு செலவிடுவதாகவும் இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முதல் நபராக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள கிம் ஜாங் உன், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
கிம் ஜாங் உன் வருகையை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு சிங்கப்பூர் அரசு உற்சாக வரவேற்பும் அளித்துள்ளது.
வடகொரிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தொலை தூர நாடு ஒன்றிற்கு கிம் செல்வது இதுவே முதன் முறையாகும்.
ஜி7 உச்சிமாநாடு முடிந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் சிங்கப்பூர் வந்துள்ளார்.
கிம்-டிரம்ப் சந்திப்பிற்கு சிங்கப்பூர் செலவிடும் தொகை எவ்வளவு....
Reviewed by Author
on
June 10, 2018
Rating:
No comments:
Post a Comment