அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திர கலை விழா

வருடாவருடம் மன்னார் மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற பூரண சந்திர கலை விழாவானது இந்த வருடம் மடு வலயத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் றோ.க.த.ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது

மன்னார் மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றா தலைமையில் இன்று 06.27.2018 காலை 9.30 மணியளவில் குஞ்சுக்குளம் றோ.க.த.ம.வி பாடசாலையின் கோட்போர்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ கூடத்தில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் மத குருக்கள் மற்றும் மடு வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் 52 பாடசாலையை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த விழாவில் தமிழ் மற்றும் சிங்கள முஸ்லீம் கலாச்சாரங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் மாணவர்களால் மேடையேற்றப்பட்டது

அத்துடன் கலைத்துறையில் சிறந்த பணி ஆற்றி தற்போது ஓய்வு நிலையில் உள்ள இசை நாடகம் நடனம் கூத்து போன்ற துறையில் பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி பெருமதியான சான்றிதாழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
 














மன்னார் மடு வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திர கலை விழா Reviewed by Author on June 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.