மாந்தை மேற்கில் அரச அதிகாரிகள் சிலரை தூக்கப்போவதாக அச்சுறுத்தும் ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள்-(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும்,ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (11) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான் ஆகியோரது இணைத்தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது அங்கு கலந்து கொண்ட அதிகாரிகள் சிலர் அவ்வாறு தெரிவித்தனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும்,ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு புதிய உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அச்சுருத்தி வருவருகின்றனர்.
-உங்களை தூக்குவோம்.இடமாற்றம் செய்வோம் என அச்சுரூத்துகின்றனர்.
இப்பிரதேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் பிரதேச செயலாளர் போன்று செயற்படுவதோடு தவரான முறையில் காணிகளையும் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமது சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செய்படுகின்ற அதிகாரிகளுக்கு எதிராக குறித்த சில ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.
எனவே எங்களை அச்சரூத்தும் உறுப்பினர்களிடம் 'பெக்கோ' இயந்திரமா இருக்கின்றது??? எங்களை தூக்குவதற்கு என சில அதிகாரிகள் கேள்வி எழுப்பியதோடு,எதிர்வரும் காலங்களில் இவ்வாறு செயற்பட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
-மன்னார் நிருபர்-
மாந்தை மேற்கில் அரச அதிகாரிகள் சிலரை தூக்கப்போவதாக அச்சுறுத்தும் ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள்-(படம்)
Reviewed by Author
on
June 12, 2018
Rating:
No comments:
Post a Comment