மன்னார் சாந்திபுரம்-சௌத்பார் பிரதான வீதி இருள்மண்டிக்கிடக்கின்றது.... மக்கள் கவலை
மன்னார் சாந்திபுரம் பிரதான வீதி இருள்மண்டிக்கிடக்கின்றது
இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் கவலை
மன்னார் நகரப்பகுதியில்இருந்து சாந்திபுரம் சௌத்பார் பகுதியானது சுமார் 4கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக அமைந்துள்ளது யாவருக்கும் தெரிந்த விடையமே..
சாந்திபுர பிரதான வீதியானது நீண்ட காலமாக இருள்மணடிக்கிடக்கின்றது யாரும் கண்டுகொள்ளவில்லை ஏன் இந்த நிலை…
பலவகையான அபிவிருத்திச்செயற்பாடுகள் சாந்திபுரம் சௌத்பார் கிராமங்களுக்கு கிடைப்பது குறைவு அப்படிக்கிடைத்தாலும் அது முழுமையாக நடைபெறுவதில்லை பல பிரச்சினைகள் இருக்கின்றபோதும் தற்போது பிரதான பிரச்சினையாகவுள்ள பிரதான வீதியானதும் மின்விளக்கும் தான்
அதில் தற்போது 05 சிறு பாலங்கள் உள்ளடக்கிய வீதி செப்பனிப்பட்டுள்ளது இருப்பினும் பிரதான வீதியானது ஒழுங்கான முறையில் செப்பணிப்படவில்லை சிறு சிறு பள்ளங்கள் ஏற்றம் இறக்கமாகவுள்ளது இது இப்படியிருக்க இவ்வீதியானது மாலையிலே இருள்மண்டிக்கிடக்கினறது இப்பாதையின் ஊடே பயணிப்பவர்கள் பெரும் அச்சத்துடன் தான் சென்றுவருவதாக முறையிடுகின்றனர்.
காரணம் இரண்டு
- பிரதான வீதியில் கிடக்கும் சிறு சிறு பள்ளங்கள்
- பிரதான வீதியில் மின்விளக்குகள் இன்மையால்
- கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாகவும் விபத்துக்களும் இடம்பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
சாந்திபுரம்-சௌத்பார் கிராமங்களில் இருந்து நகரப்பகுதியில் வேலை செய்பவர்கள் பல்வேறு கடமைகளுக்காக சென்று திரும்பும் வேளையில் பல பிரச்சினைகளை தினம் அனுபவிக்கின்றார்கள் குறிப்பாக வேலைக்காகவும் மாலைநேரவகுப்புக்களுக்காகவும் சென்று திரும்பும் பெண்கள் மற்றும் மாணவிகள் இவ்வீதிகளால் வரும்போது ஏற்படும் பிரச்சினைகள் சொல்ல முடியவில்லை.....
கள்ளுத்தவறனையில் குடித்துவிட்டு இருப்பவர்கள் பேசும் பேச்சும் செய்யும் செயலும் அதே போல் அவ்வீதிகளின் கரையில் கூடி நிற்கும் சில இளைஞர்கள் செய்யும் செயலும் அருவருக்கதக்கவை இவற்றினை
தடைசெய்வதற்கு….
- மன்னார் நகரசபையும்
- வீதிஅபிவிருத்தி அதிகார சபையும்
- மற்ற அமைப்புக்களும் ஒன்றிணைந்து தரமான வீதியும் பிரகாசமான மின்விளக்குகளையும் உடனே பொருத்துங்கள் பிரச்சினைக்கு தீர்வு பிரகாசமான மின்விளக்குகளே…..
பிரச்சிரனைகள் நடைபெற முன் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது சிறப்பான மக்கள் சேவையாகும்.
பொறுப்பானவர்கள் புறப்படுங்கள் உங்களின் சேவை மக்களுக்கு தேவை….கவலை தீர்க்கபடுமா….
-மன்னார்விழி-
மன்னார் சாந்திபுரம்-சௌத்பார் பிரதான வீதி இருள்மண்டிக்கிடக்கின்றது.... மக்கள் கவலை
Reviewed by Author
on
June 05, 2018
Rating:
No comments:
Post a Comment