அண்மைய செய்திகள்

recent
-

கனடா பிரதமருடன் சமாதான பேச்சு வார்த்தை: ட்ரம்ப் முடிவு! -


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்றிரவு கனடா பிரதமருடன் நல்லெண்ண பேச்சு வார்த்தை சந்திப்பு ஒன்றை நடத்தியதாக தெரிய வருகிறது.
வடகொரிய தலைவர் கிம் உடனான புதிய உறவுக்கு பின் கடந்த வாரத்தில் இருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசாமல் இருந்தார் ட்ரம்ப். ஜி7 மாநாட்டிற்கு பிறகு ஜஸ்டின் தனது முதுகில் குத்திவிட்டதாக ட்வீட் செய்திருந்தார் ட்ரம்ப்.

அதன் பின் கிம் உடனான சிங்கப்பூர் சந்திப்பு நிகழ்ந்தது. வடகொரியா தலைவரிடம் இருந்து வெற்றிகரமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ட்ரம்ப் இப்போது கனடிய பிரதமரை சமாதான பேச்சு வார்த்தை மூலம் சந்திப்பதில் தனது அடுத்த சவாலாக கருதுகிறார்.

இந்த சமாதான பேச்சு வார்த்தைக்காக கனடாவில் உள்ள பாபின் தீவுகளுக்கு செல்கிறார் ட்ரம்ப். ஜஸ்டின் பற்றி அவருக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது என்று கடுமையாக விமர்சித்த நிகழ்வுகளை தாண்டி வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இந்த சமாதான பேச்சு வார்த்தை நடக்க இருப்பதாக தெரிய வருகிறது.
ட்ரம்பிற்கு தேச தலைவர்கள் ராணுவத்தனத்தோடும் அதிகார நோக்கோடும் இருக்க வேண்டும் ஆனால் கனடா பிரதமரின் அமைதியும் சாந்தமும் அவருக்கு தவறாக பட்டிருக்கிறது. அதனால் கூட இந்த அதிருப்தி நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அதுமட்டும் இன்றி கனடா மீது அமெரிக்கா அதிகமான வர்த்தக வரி விதித்ததை தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் ஜி 7 நாடுகளில் இருந்து கனடா விலகி கொள்ளும் என்றும் ஜஸ்டின் தெரிவித்திருந்தார்.
இவை அனைத்தும் ஒன்று கூடி ட்ரம்ப் கனடா பிரதமர் மீதான தனது வெறுப்பை ட்வீட் செய்து உலக மக்களுக்கு காட்டும் அளவிற்கு போனது. இருப்பினும் தொடர்ந்து அமைதி காத்த ஜஸ்டினுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ஏன் எனில் இந்த சமாதான பேச்சு வார்த்தை தற்போது கனடாவில்தான் நடைபெறுகிறது. ஜஸ்டின் ஆதரவாளர்கள் கூறுகையில் சமாதானம் என்று வந்தால் ட்ரம்ப்தான் கனடாவில் கால் வைக்க வேண்டும் என்று பூடகமாக தங்கள் சந்தோஷத்தை தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
கனடா பிரதமருடன் சமாதான பேச்சு வார்த்தை: ட்ரம்ப் முடிவு! - Reviewed by Author on June 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.