அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புகையிரத கடவை காப்பாளர் ஒருவர் பலி.......


தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத கடவை காப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் உயிர்த்தராசன் குளம் புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது.
குறித்த புகையிரத கடவையில் காப்பாளராக (காவலாளி) கடமையாற்றிய மாளிகைப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புகையிரத கடவை காப்பாளர் ஒருவர் பலி....... Reviewed by Author on July 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.