அண்மைய செய்திகள்

recent
-

சதோச புதைகுழியில்....ஓருவரை ஒருவர் அனைத்தவாறு அருகருகே இரு மனித எலும்புக்கூடுகள்..


மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக அனேக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருகின்றது. தற்போது அதிர்சி அளிக்க கூடிய விதமாக விரிவுப்படுத்தப்பட்ட இடத்திலும் நேற்றும் மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்மந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணி இடம்பெற்று வருகின்றது.

இவ் அகழ்வுப் பணியானது இன்று (18.07.2018) 36 வது நாட்களாக இடம்பெற்றுவருகின்றது. நேற்று இவ் பணியானது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணியும்
அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையில் ஐந்து அடி ஆலத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் இன்று அகழ்வு இடம்பெற்றது. நேற்று அகழ்வு பணிகள்  இடம்பெற்ற புதிய இடத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தேகிக்கப்படுகின்ற தடய பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது
அது மாத்திரம் இன்றி ஓருவரை ஒருவர் அனைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.




சதோச புதைகுழியில்....ஓருவரை ஒருவர் அனைத்தவாறு அருகருகே இரு மனித எலும்புக்கூடுகள்.. Reviewed by Author on July 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.