அண்மைய செய்திகள்

recent
-

நறுவிலிக்குளத்தில்ஆயுர்வேத வைத்தியசாலையின் வளாகத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்-வடக்கு சுகாதார அமைச்சர்.


மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைந்துள்ள  மாவட்ட ஆயுர் வேத வைத்தியசாலை வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் மூலிகைச் செடிகளை அப்பிரதேசத்தில் உள்ள கால்நடைகள் சேதப்படுத்துவதாக குறித்த வைத்தியசாலை பணியாளர்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனிடம் முறையிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட ஆயுர் வேத வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.கணசீலன் இன்று திங்கட்கிழமை(6) மதியம் திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு சென்று வைத்தியசாலையின் நிலமையை அவதானித்தார்.

-இதன் போதே குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் குறித்த விடையத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-குறித்த ஆயுள்வேத வைத்தியசாலை வளாகத்தினுள் பல்வேறு மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றது.
குறித்த வைத்தியசாலைக்கு சுற்று வேலி முற்கம்பிகளினால் அடைக்கப்பட்டுள்ளது.

-எனினும் அண்மைக்காலமாக ஆடு மற்றும் மாடு போன்ற கால்நடைகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை சாப்பிட்டு விட்டுச் செல்லுகின்றது.

-குறித்த சுற்று வேலியை முழுமை படுத்திய போதும்,குறித்த சுற்று வேலியின் முற்கம்பிகளை வெட்டி விட்டுள்ளனர்.
தற்போது அதனூடாக அதிகலவான ஆடுகள்   வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை சாப்பிட்டு சேதப்படுத்தி  விட்டு போகின்றது.

-இதனால் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கெண்டு வந்தனர்.

-இதன் போது ஒரு தொகுதி ஆடுகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை சாப்பிடுவதை அமைச்சர் நேரடியாக அவதானித்தார்.

-உடனடியாக கிராம அலுவலகர் ஊடாக குறித்த ஆடுகளின் உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, எதிர்வரும் காலங்களில் கால்நடைகள் வைத்தியசாலை வளாகத்தினுள் வந்து மூலிகைச் செடிகளை  சாப்பிடும் பட்சத்தில் அற்றை பிடித்து பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-மேலும் அங்கு கடமையாற்றும் பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







நறுவிலிக்குளத்தில்ஆயுர்வேத வைத்தியசாலையின் வளாகத்தில் வளர்க்கப்பட்டுள்ள மூலிகைச் செடிகளை சேதப்படுத்தும் கால்நடைகள்-வடக்கு சுகாதார அமைச்சர். Reviewed by Author on August 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.