அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் சட்டவிரோத வைத்தியசாலைகள் முற்றுகை!


வவுனியாவில் இயங்கிவரும் தனியார் வைத்தியசாலைகள், மருந்தகங்கள், ஆயுர் வேத வைத்தியசாலைகளுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் இன்று காலை திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அங்கு இடம்பெற்றுவரும் நவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன், அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மருந்து வில்லைகளை கைப்பற்றியுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வியடம் தொடர்பாக மேலும் தெரிவிக்கும்போது,
வவுனியாவில் இன்று காலை முதல் பிற்பகல் வரை இரண்டு மருந்தகங்கள், இரண்டு தனியார் வைத்தியசாலைகள், மூன்று ஆயுர் வேத வைத்திய நிலையங்களுக்கு திடீரென்று விஜயம் மேற்கொண்டு இங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை அவதானித்துள்ளார்.

இதன்போது தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயுர் வேத வைத்தியசாலையில் சிகிச்சைக்குப்புறம்பான ஆங்கில மருந்து வில்லைகள் சிலவற்றை அங்கிருந்து மீட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் சட்டவிரோத வைத்தியசாலைகள் முற்றுகை! Reviewed by Author on August 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.