கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பலன்கள் -
கரிசலாங்கண்ணி கீரை உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கவும் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகத்தை தூய்மை செய்யவும் உதவுகின்றன.
மேலும் சளி, இருமல், அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை குணமாக்கும்.
மருத்துவ பயன்கள்
- கரிசலாங்கண்ணி கீரையாகத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர மங்கலான கண் பார்வை தெளிவு பெறும்.
- இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும், ஈறுகள் பலப்படும்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.
- மஞ்சள் காமாலை நோய்க்கு கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இலை இரண்டையும் சமஅளவு எடுத்து, அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு 50 மி.லி பசும்பாலில் கலந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய் குணமாகும்.
- ரத்த சோகை படிப்படியாக குறைய கரிசலாங்கண்ணி கீரையை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு தினமும் காலை சாப்பிட்டால் ரத்த சோகை முழுமையாக குணமடையும்.
- கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். மேலும் முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.
- இளநரை மறைய கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலர்த்தி சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் ½ தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு சாப்பிட வர இளநரை மறையும்.
கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பலன்கள் -
Reviewed by Author
on
August 09, 2018
Rating:
No comments:
Post a Comment