அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-(படம்)

வரலாறறுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆலயத்தின் வருடாந்த ஆவணி மாதத் திருவிழா நேற்று  திங்கட்கிழமை (6) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை தலைமையில் இடம் பெற்ற கொடியேற்ற நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உற்பட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

-நேற்று  திங்கட்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.

14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனைத்தொடர்ந்து மறு நாள் 15 ஆம் திகதி புதன் கிழமை காலை 6.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து கூட்டு திருப்பலியாக திருவிழா திருப்பலியை ஒப்பக்கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்-(படம்) Reviewed by Author on August 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.