அண்மைய செய்திகள்

recent
-

சிங்கப்பூரில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன் -


சிங்கப்பூரில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல கணித வினாடி வினாப் போட்டியில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
தரம் 8 இல் கல்வி பயிலும் கே.எச்.எம்.அன்பஸ் என்ற மாணவனே மூன்றாமிடத்துக்கு தெரிவாகி வெண்கலப் பதக்கத்தினை தனதாக்கி கொண்டு சாதனை படைத்துள்ளதாக பாடசாலையில் பிரதி அதிபர் எம்.எல்.எம்.லாபீர் தெரிவித்தார்.


சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற கணித வினா விடைப் போட்டியில் பதினைந்து நாடுகளில் இருந்து 32 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற குறித்த போட்டியில் கலந்து கொள்ள எமது நாட்டிலுள்ள மாணவர்கள் சென்றிருந்தனர். அந்த வகையில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் செல்வன் கே.எச்.எம்.அன்பஸ் சர்வதேச ரீதியிலும் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.

சாதனை படைத்து நாட்டுக்கும், பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும் புகழை சேர்த்துத் தந்துள்ள மாணவனுக்கு தன்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்துடன், குறித்த மாணவன் தன்னுடைய திறமையினை வெளிக்காட்ட உதவிய ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

சிங்கப்பூரில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன் - Reviewed by Author on August 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.