அண்மைய செய்திகள்

recent
-

சிவபூமியான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்வாகத்தில் உள்ள ஒருவரின் அடாவடித்தனம்

மன்னார் மண்ணின் பெருமை இந்துமக்களின் புகழ்பூத்த வரலாற்று புனித தலமான சிவபூமியாக கருதப்படுகின்ற திருக்கேதீஸ்வர ஆலயமானது உலகத்தில் இருக்கின்ற இந்துமக்களின் வணக்கஸ்தலம் மட்டுமல்ல எல்லா மதத்தினரும் வேற்றுமை இன்றி ஒற்றுமையாக வந்துசெல்லும் ஒரு புனித பூமியாகும்.

இப்படியான ஆலயத்தில் கடந்த சில நாட்களாக அர்ச்சனை பற்றுச்சீட்டு வழங்கும் திரு.பொன்னுத்துரை என்பவர் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களிடம் மேலாடையை கழற்ற வேண்டும்  பாதணியை கழற்ற வேண்டும்  என கடுமையாகவும் அநாகரீகமான முறையிலும் நடந்து கொள்வதாகவும் தவறான வார்த்தை சொற்பிரயோகங்கள் ஈடுபடுவதாகவும் வழமையாக நடப்பதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறிப்பாக இன்று 11-08-2018 ஆலயத்திற்கு வருகை தந்த சிங்கள சகோதரர்களிடம்  சிறுவர் பெரியவர் என்று பாராமல்  அவர்களின் shirt-மேலாடையை பிடித்து இழுபறிபட்டு   தவறான வார்த்தை சொற்பிரயோகங்களிலும்   ஈடுபட்டதாகவும் எமது இணையத்தளத்திற்கு பக்தர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

 இந்து சமயத்தினருக்கு தெரியும் கோவிலுக்குள் நுழையும் போது கடைப்பிடிக்க வேண்டிய சமய அனுஸ்ட்டானங்கள் ஏனைய மதத்தவர்களுக்கு தெரியாது அவ்வாறான பட்சத்தில் அவர்களுக்கு பண்பான முறையில் அன்பாக சொல்லிபுரிய வைக்கவேண்டுமே தவிர இப்படியான  அடாவடித்தன செயற்பாடுகள் முறையல்ல ...

எல்லா மதத்தவரும் வந்து தரிசித்து செல்லுகின்ற புனித திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இவ்வாறான புரிந்துணர்வற்றவர்கள் நிர்வாகப்பணியில் இருப்பதும் அடாவடித்தனமாக செயல்படுவதும் இந்துமக்களினதும் இந்த புனித திருக்கேதீஸ்வர ஆலயத்தினதும் புனித தன்மையினையும் நன்மதிப்பையும் அவமரியாதை செய்யக்காரணமாய் அமைந்து விடும். எனவே ஆலயபரிபாலன சபை  உடனடியாக திரு.பொன்னுத்துரை அவர்களின் மீது நடவடிக்கையினை  மேற்கொள்ள வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பக்தர்களின் கோரிக்கை........ 



சிவபூமியான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்வாகத்தில் உள்ள ஒருவரின் அடாவடித்தனம் Reviewed by Author on August 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.