அமெரிக்காவை நெருங்கிய அதிபயங்கர புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம் -
தற்போது ஃபுளோரன்ஸ் புயலானது அமெரிக்காவையே அச்சுறுத்தி வருகின்றது.
முதலில் வடக்கு அட்லாண்டிக் கடலை கடக்கும் எனவும் பின்னர் பெர்முடா தீவு மற்றும் பஹாமாஸை வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கடக்க உள்ளது. பின்னர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை கடக்க உள்ளது.
முதல் வடக்கு கரோலினாவின் வில்மிங்டன் நகரை இந்த ஃபுளோரன்ஸ் புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த புயல் அதிபயங்கரமானது என அந்நாட்டு தேசிய வானியல் மையம் தெரிவித்துள்ளது. தற்போது 4ஆம் நிலையில் உள்ள இந்த புயல் விரைவில் 5 ஆம் நிலையை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படும் என என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து டிவிட்டரில் வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவை நெருங்கிய அதிபயங்கர புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம் -
Reviewed by Author
on
September 12, 2018
Rating:
No comments:
Post a Comment