அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி!


ஈழத் தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை உலகிற்கு உரக்க சொன்ன பொங்குதமிழ் பிரகடன நினைவுக்கல் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் துணைவேந்தர் விக்கினேஸ்வரால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.


தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம ஆகியன அங்கீகரிக்கப்பட வேண்டுமென இராணுவ முற்றுகைக்குள் முன்னெடுக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் நிகழ்வு நினைவாக யாழ் பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி இன்று திறந்து வைக்கபட்டுள்ளது.


இதனிடையே முதன்முதலில் பொங்குதமிழ் நிகழ்வை முன்னிட்டு நாட்டப்பட்டிருந்த பெயர்பலகை அகற்றப்பட்டு புதிய  பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது.எனினும் பழைய தூபியும் பேணப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 






யாழ்.பல்கலையில் பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி! Reviewed by Author on September 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.