மன்னாரில் 40 வருடங்களின் பின் அரங்கேறிய புனித சூசையப்பர் வாசப்பு நாட்டுக்கூத்து -
மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்,
“மட்டக்களப்பிற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் கலைகளினூடாக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கலைப்பீட மாணவர்கள் அதிகமாக மன்னார் மாவட்டத்தில் உருவாக்கம் பெற்ற பாரம்பரிய கலைக்கூத்துக்களை ஆராய்ந்து கற்பதில் பெரும் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக நுண் கலைப்பீட பேராசிரியர் எஸ்.சந்திரகுமார், வட மாகாணசபை உறுப்பினர் பிரிமுஸ் சிராய்வா மற்றும் பங்குத் தந்தையர்கள், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் எல பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னாரில் 40 வருடங்களின் பின் அரங்கேறிய புனித சூசையப்பர் வாசப்பு நாட்டுக்கூத்து -
Reviewed by Author
on
September 22, 2018
Rating:
No comments:
Post a Comment