6000 யூதர்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்த ஜேர்மானியர் நாடுகடத்தல் -
1949ஆம் ஆண்டு போலந்திலுள்ள தனது தந்தையின் பண்ணையிலும் ஜேர்மன் தொழிற்சாலை ஒன்றிலும் பணி புரிந்ததாக பொய் சொல்லி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார் Jakiw Palij.
உண்மையில் அந்த நேரத்தில் அவர் சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக மணி புரிந்திருக்கிறார்.
1943ஆம் ஆண்டு ஒரே நாளில் Jakiw Palijஇன் கண்காணிப்பில் இருந்த 6000க்கும் அதிகமான யூதர்கள் துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட்டனர். பின்னர் அமெரிக்காவிற்கு வந்து பல ஆண்டுகள் நியூயார்க்கில் வாழ்ந்து வந்த அவரின் வேஷம் 1993 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளால் கலைந்ததால், அவரது அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக அமெரிக்க அதிகாரிகள் அந்த உத்தரவை நிறைவேற்றத் தவறி விட்டனர்.
இந்நிலையில் தற்போது அந்த கொடூர ஜேர்மானியர் ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
ஜேர்மனியில் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த 95 வயது குற்றவாளியின் தலை எழுத்தை ஜேர்மனிதான் முடிவு செய்ய வேண்டும்.
6000 யூதர்களை ஒரே நாளில் வெட்டிச் சாய்த்த ஜேர்மானியர் நாடுகடத்தல் -
Reviewed by Author
on
September 21, 2018
Rating:
No comments:
Post a Comment