86 பேர் பலி... எங்கு பார்த்தாலும் மரண ஓலம் -
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் புகழ்பெற்ற விக்டோரியா ஏரி உள்ளது.
இது சுமார் 69 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவும், 272 அடி ஆழமும் கொண்டது.
நேற்று எந்த ஏரி வழியாக படகு மூலம் 400 பேர் வரை பயணம் செய்துள்ள நிலையில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்துள்ளது.
இதில் இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
100 பேர் மட்டுமே இதில் பயணம் செய்யமுடியும் என்ற நிலையில் 400 பேர் பயணம் செய்துள்ளனர்.
200-க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் 100 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
பலர் காணாமல் போயுள்ள்னர்.
கடந்த 1996-ஆம் ஆண்டு இதே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 800 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
86 பேர் பலி... எங்கு பார்த்தாலும் மரண ஓலம் -
Reviewed by Author
on
September 21, 2018
Rating:
No comments:
Post a Comment