அண்மைய செய்திகள்

recent
-

முடக்கப்பட்டது ஏ9 பிரதான வீதி! வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போராட்டம் -


வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இன்று காலை வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பாரிய போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக ஏ9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டம் பஜார் வீதியுடாக ஹொரவப்பொத்தானையை அடைந்து அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகத்தினை அடைந்துள்ளது.

விடுதலை செய், விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப், சிறிரெலோ, ஈரோஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனின் கட்சி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முடக்கப்பட்டது ஏ9 பிரதான வீதி! வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போராட்டம் - Reviewed by Author on September 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.