அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தருகில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு.....படம்

மன்னார் கட்டுக்கரை கோரமோட்டை என்னும் இடத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி மற்றும் கிணறு  வீட்டு உரிமையாளரால் துப்பரவு செய்யப்பட்ட நிலையில் கிணற்றினை துப்பரவு செய்யும்  பொழுது 05-09-2018 கைக்குண்டு மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வெடிபொருட்களை கண்ட வீட்டின் உரிமையாளர்  உடனடியாக முருங்கன் பொலிஸ்நிலையத்தில்   முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து  அங்கு சென்ற பொலிசார் மிகவும் ஆழமான கிணற்றுக்குள் முப்பதுக்கும் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்து அந்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிசாரை நிறுத்தி உடனடியாக சம்பவம் குறித்து மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்

கிணற்றினுள் உள்ள அனைத்து வெடிபொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யுமாறு வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட   பறயனாயங்குளம் விஷேட அதிரடிப் படையினருக்கு மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
முருங்கன் பொலிஸ்நிலைய உதவிப் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நடந்த யுத்தம் காரணமாக பராமரிப்பில் இல்லாமலிருந்த வீடுகள் கிணறு களில் நிச்சயமாக வெடிபொருட்கள் இருக்கக் கூடும் ஆகவே பொதுமக்கள்  நீண்டகாலம் பராமரிப்பில் இல்லாத தங்கள் காணிகளில் உள்ள வீடுகள் கிணறுகள் துப்பரவு செய்யும் பொழுது மிக அவதானமாகவும் விழிப்புனர்வுடனும் செயற்படுமாறும்  கேட்டுக்கொள்வதோடு சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் பொதிகளை கண்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 



மன்னார் கட்டுக்கரை குளத்தருகில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு.....படம் Reviewed by Author on September 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.