அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாண சபையின் இறுதி அமர்வு..!


வடமாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாண சபையின் இறுதி அமர்வு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறும்.

வடமாகாணசபையின் 131வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவை தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
வடமாகாண சபையின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக்காலம் ஒக்டோபர் மாதம் 25ம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது.

அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23ம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம். மேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது.

அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ம் திகதி நடைபெ றும் என அவை தலைவர் மேலும் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் பிறந்த நாளில் வடமாகாண சபையின் இறுதி அமர்வு..! Reviewed by Author on September 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.