அகதிகள் விடயத்தில் ஒரு வழியாக மனமிறங்கிய பிரான்ஸ்:
மனிதநேய மீட்புப் படகான Aquarius மீட்ட அகதிகளில் 59 பேரை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது.
அவர்கள் Charles de Gaulle விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் சூடானைச் சேர்ந்தவர்கள். சோமாலியா, எரித்ரியா மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவார்கள்.
ஆகஸ்டு மாதம் 11ஆம் திகதி 141 அகதிகளை மீட்ட பின்னர் பல நாட்கள் அந்த படகு அலைக்கழிக்கப்பட்டது.
Aquarius பிரெஞ்சு ஜேர்மனி தொண்டு நிறுவனங்கள் இணைந்து இயக்கும் படகாகும்.
ஜூன் மாதம் 630 அகதிகளுடன் ஏழு நாட்கள் அந்த படகு கடலில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு புலம்பெயர்தல் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகம் 59 அகதிகள் பிரான்ஸ் வந்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளது. அவர்களில் 37 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் 5 பேர் குழந்தைகள்.
அகதிகள் விடயத்தில் ஒரு வழியாக மனமிறங்கிய பிரான்ஸ்:
Reviewed by Author
on
September 01, 2018
Rating:
No comments:
Post a Comment