அண்மைய செய்திகள்

recent
-

பதுளை மாவட்டத்தில் மன்னார் சமய நல்லிணக்க குழு.......படங்கள்

மதங்கள் மற்றும் இன ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை நீக்கி நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் ஏற்படுத்தும் வகையில் மன்னார் வாழ்வுதயம் (கறிற்றாஸ் ) நிறுவனமும் பதுளை மாவட்ட USCOD- உஸ்கொட் (கறிற்றாஸ்)நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் உறவு பரிமாற்ற  திட்ட நிகழ்வுகள் 21-09-2018 மாலை நிறைவு பெற்றது

மன்னார் மாவட்டத்தின்
  • அளவக்கை 
  • வட்டக்கண்டல் 
  • ஆன்டாங்குளம் 
  • செம்மண்தீவு 
  • அடம்பன் போன்ற கிராமத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் அங்கத்தினரை உள்ளடக்கிய பரிமாற்று வேலைத்திட்ட சமய நல்லிணக்க குழு கடந்த புதன் 19-09-2018 காலை பதுளை பயணமானது 

பதுளை மாவட்டத்தில் உள்ள சமய நல்லிணக்க குழுவுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொண்டதுடன் பதுளை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற
  • ஸ்ரீ பேச்சியம்மன் இந்து ஆலயம்
  • ஹித்தும பௌத்த விகாரை
  • முஸ்லீம் அரபுக்கல்லூரி
  • புனித மரியாள் பேராலயம்  மற்றும் துன்கிந்த நீர்வீழ்ச்சி  நேரில் சென்று பார்வையிட்டனர்

அத்துடன் 2018 ஆண்டுக்கான பொது ஹச் விழாவும் அணைத்து மத தலைவர்களை உள்ளடக்கிதாக இடம்பெற்றது.

மன்னார் மாவட்டதில் இருந்து பயணமான ஒவ்வொரு தமிழ் முஸ்லீம் குடும்பத்தையும் பதுளையை சேர்ந்த ஒவ்வொரு சிங்கள குடும்பத்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று உபசரித்தமை குறிப்பிடதக்கது.

தற்போதைய சூழலில் இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் தான் மதம்- சமயம்-மொழி-இனங்களுக்கிடையான வேற்றுமைகளை நீக்கி ஒற்றுமையான தொரு சமாதான வாழ்வை வாழ்வதற்கு வழியாக  அமையும் செயற்பாடாகும்.

-தொகுப்பு- வை-கஜேந்திரன்-


























பதுளை மாவட்டத்தில் மன்னார் சமய நல்லிணக்க குழு.......படங்கள் Reviewed by Author on September 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.