நான்கு பெண்கள் பலி..!வவுனியாவில் புகையிரதத்துடன் கார் மோதுண்டு கோர விபத்து,
வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் 16.09.2018காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நெடுந்தீவின் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிறுமி உட்பட 4 பெண்கள் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்டே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.காரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதியை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்திற்கான காரணம்
- பாதுகாப்பான கடவை இன்மை
- தண்டவாளத்தில் புகையிரதம் வரும் போது தொலைவில் வந்தாலும் அருகில் வந்தாலும் குறுக்காக கடக்க முற்படும் போது வாகனத்தின் இஞ்சின் செயலிழந்து விடும் எனவே கவனமாக பயணத்தினை மேற்கொள்ள வேண்டும்.
நான்கு பெண்கள் பலி..!வவுனியாவில் புகையிரதத்துடன் கார் மோதுண்டு கோர விபத்து,
Reviewed by Author
on
September 17, 2018
Rating:
No comments:
Post a Comment