மன்னார் மனித புதைகுழி மேற்பகுதியை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை.....படங்கள்
மன்னார் மனித புதைகுழி உள்ளக நடவடிகைகள் 86 வது நாளாக இன்றும் தொடர்சியாக இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது ஆனாலும் இன்றைய தினம் அகழ்வு பணிகள் மற்றும் அப்புறப்படுத்தும் பணிகளை விடுத்து குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணா ராஜா மேற்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் மன்னார் மனித புதை குழி தொடர்பான உண்மை நிலையினை அறிவதற்காண அகழ்வு மற்றும் ஆய்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்த காற்று மற்றும் வானிலை மற்றும் அதிகரித்த மழை காரணமாக அகழ்வு பணிகள் நடைபெறும் வளாகமானது முழுவதும் நீரினல் சூழ்ந்து காணப்பட்டதை தொடர்ந்து அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பெறும் சிரமம் ஏற்பட்டது அது மட்டும் இன்றி அகழ்வு பணியின் போது அப்புறப்படுத்தாமல் புதைகுழியில் காணப்படுகின்ற மேலதிக மனித எச்சங்களும் சிதைவடைவதற்கான வாய்பும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான நிதி பங்களிப்பு மற்றும் உதவியானது காணமல் ஆக்கப்பட்டோருக்காக செயற்படும் அலுவலகத்தில் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக மனித புதைகுழி வளாகத்தினை முழுவதுமாக மூடுவதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் இன்ற வழங்கப்பட்டதை தொடர்ந்து இன்று குறித்த வளாகம் முழுவதையும் அதீத காற்று மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மன்னார் மனித புதைகுழி மேற்பகுதியை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை.....படங்கள்
Reviewed by Author
on
October 13, 2018
Rating:
No comments:
Post a Comment