அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்......


மன்னார் மீனவர்களுக்கு ஒரு அறிவித்தல்
மீனவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பணயம் வைத்தே கடற்தொழிலுக்கு செல்கின்றார்கள் அவர்கள் தமது தொழில்முயற்சிகளின்போது பலவாறான துன்பங்கள் துயரங்களுக்கு ஆளாகின்றார்கள்.

ஆபத்தான தொழிலாக இருந்தாலும் அவதானமாகவும் அறிவுத்திறனுடன் மேற்கொணடால் அசம்பாவிதங்கள் இல்லை நமக்கு…..

காற்றினாலும்  மழையினாலும் கடல்பெருக்கத்தினாலும் ஏற்படுகின்ற பெரும் அழிவுக்குள்ளாகும் கடற்றொழிலாளர்கள்.
கடலில் ஏற்படும் விளைவுகளாலும் ஆபத்துக்களாலும் ஏற்படுகின்ற பொருள் இழப்புக்கள் உயிர் இழப்புக்கள் ஏற்படும் போது அந்த மீனவனின் குடும்பத்தின் நிலை என்ன…..
  • மீனவர்கள் உணர்ந்ததுண்டா….?
  • மீனவர்களின் குடும்பங்கள் உணர்ந்ததுண்டா….?
  • மீனவர்களின் அமைப்புக்கள் விளக்கம் அளித்ததுண்டா…?
அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி திட்டம் உள்ளது
கடற்தொழில்புரியும் 18முதல் 65வரையுமானவர்களுக்கான திட்டம்
ஒரு வருடத்திற்கான காப்புறுதிக்கட்டணம் வெறும் 995ரூபா மடடுமே ஆனால் பயன் 400 ரூபாயில் இருந்து 1200000 இலட்ச்சம் ரூபாவரை இன்றே காப்புறுதி செய்யுங்கள்.
மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள உங்கள் இடங்களில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளதிணைக்களம் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலகங்கள் அமைந்துள்ள இடம்
  • பேசாலை
  • எருக்கலம்பிட்டி
  • முசலி
  • விடத்தல் தீவு
  • வங்காலை
  • மன்னார் இத்திணைக்களங்களில் பணிபுரியும் அலுவலகர்களிடம் விபரமாக கேட்டு அறிந்து கொள்ளலாம்.
எமக்கான தேவையினை நாம் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் அதை சேவையாக செய்யவே அதிகாரிகள் உள்ளார்கள் அவர்களிடம் சென்று உங்களது பாதுகாப்பான தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.

விபரீதங்களும் விபத்துக்களும் வரும்முன் காப்பதே சிறந்தது….

தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் மீனவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்...... Reviewed by Author on October 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.