வடமாகாணத்தில் முதலிடம் பெற்ற மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவிக்கு வரவேற்பு-படங்கள்
வடமாகாணத்தில் 300 பாடசாலை3000 மாணவர்களுக்கிடையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட ‘Anchor Students With Talent’ 6- 9 வகுப்பு பாடல் பிரிவில் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று வெற்றிக்கேடையத்தை தன் வசப்படுத்திக் கொண்ட மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி எஸ்.கோபிகா வை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை18-10-2018 காலை இடம் பெற்றது.
மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் வியாழக்கிழமை 18-10-2018 காலை 9 மணியளவில் வரவேற்பு ஊர்வலம் ஆரம்பமானது.
இதன் போது பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் குறித்த மாணவியை வரவேற்று மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் குறித்த மாணவிக்கு சந்தன மாலை அணிவித்து கௌரவித்ததோடு,வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகளும் கௌரவித்தனர்.
அதனைத்தொடர்ந்து குறித்த மாணவி ஊர்வலமாக பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
வடமாகாணத்தில் முதலிடம் பெற்ற மன்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவிக்கு வரவேற்பு-படங்கள்
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
No comments:
Post a Comment