அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஜோசப் வாஸ் நகரில் 02சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்-படங்கள்

மன்னார் விடத்தல்தீவின் மக்கள் வசிக்கும் பகுதியான தோட்டவெளியில் ஜோசப் வாஸ் நகர்  கிராமபகுதியில் உள்ள மழை நீர் நிரம்பிய குட்டையில் மூழ்கி  இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

 இன்பயூட் அவர்களின் மகன் செல்வன் லிவிசன் வயது -07 இறந்த மற்றைய சிறுவனான அதே கிராமத்தை சேர்ந்த கனகராஜ், சசி அவர்களின் மகன் றஜித் வயது -07 இருவரும் இன்று10-11-2018 சனிக்கிழமை  மாலை  உயிரிழந்துள்ளனர் இச்சம்பவமானது ஜோசப் வாஸ் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 அப்பகுதியில் சிறுவனின் சடலம் கரையில் கண்ட கிராமத்தவர்கள் மற்ற சிறுவனின் சடலத்தினையும் கண்டெடுத்தவுடன் பொலிசுக்கு தகவல் தெரிவித்து பல மணி நேரத்திற்கு பின்புதான் சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்ததாகவும் வவுனியாவில் இருந்து வருகை தந்த  ஸோCஓ தடவியல் பொலிசாரும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளன்ர்.

இறந்த இரண்டு சிறுவர்களின் சடலம் மன்னார் பொதுவைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது மன்னாரில் மழைபெய்ததன் காரணமாக சிறுகுட்டைகளும் கிடங்குகளும் நீர் நிரம்பியிருப்பதால்  சிறுவர் சிறுமியரை தனிமையில் விளையாடவோ வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம் பெற்றோர்கள் பிள்ளைகள் மட்டில் மிகவும் அவதானமாய் இருங்கள்.....

இழந்த பின்பு  வருந்தி பலனில்லை......
இருக்கும் போதே அவதானமாய் இருப்போம்............

-VMK-


மன்னார் ஜோசப் வாஸ் நகரில் 02சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்-படங்கள் Reviewed by Author on November 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.