அண்மைய செய்திகள்

recent
-

திருகோணமலையில் 272,822 பேர் வாக்களிக்க தகுதி -


2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் எதிர் வரும் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 272,822 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் , மூதூர், திருகோணமலை, சேருவில ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
இதில் மூதூர் தொகுதியில் 103,681 வாக்காளர்களும் திருகோணமலைத் தொகுதியில் 91,907 வாக்காளர்களும் சேருவில தொகுதியில் 77,234 வாக்காளர்களும் பதியப்பட்டிருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு இரு ஆசனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பொது சன ஐக்கிய முன்னணி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் 272,822 பேர் வாக்களிக்க தகுதி - Reviewed by Author on November 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.