அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவில் இடம் பெற்ற இரத்த தான முகாம்-படங்கள்

 மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில், தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை(9) காலை இரத்த தான முகாம் இடம் பெற்றது.

தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவு அதிகாரியின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(9) காலை 10.15 மணியளவில் இரத்த தான முகாம் இடம் பெற்றது.

இதன் போது தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள்,இராணுவ உயர் அதிகாரிகள் இரத்ததானம் செய்து வைத்தனர்.

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்னார் தள்ளாடி இராணுவ 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

குறிப்பாக டெங்கு சிரமதானப்பணிகள்,மரம் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம் பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் இரத்த தான முகாம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.














மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவில் இடம் பெற்ற இரத்த தான முகாம்-படங்கள் Reviewed by Author on November 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.