அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களையும் விட்டு வைக்காத கஜா புயல்........

கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் ஆனது நேற்று நள்ளிரவுடன் கரையை கடந்துள்ளது

நேற்றைய தினம் விடுக்கப்பட்ட அறிவித்தலின் படி கஜா புயலானது மன்னார் மாவட்டத்தின் ஊடக காற்றின் திசை காரணமாக கடந்து செல்லும் எனவும் சில நேரங்களில் புயலின் தாக்கம் வழமையை விட அதிகமாக காணப்படும் எனவும் அதனால் மன்னார் மாவட்ட மக்களை தயார் நிலையில் இருக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது அத்துடன் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்கள் கண்காணிப்பில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிட்கும் அவசர நிலை தொடர்பான விசேட குழு அமைக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 11 மணி தொடக்கம் காலை வரை தொடர்சியாக மன்னார் மாவட்டத்தில் ஒரளவு  வேகத்துடனும் அதிகளவிலான மழையும் பெய்து வருகின்றது

புயலானது கரையை கடந்த போதும் மழையானது தொடர்சியாக பெய்து வருவதனால் அனேகமான இடங்கள் நீரில் முழ்கியுள்ளது கற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுவதனால் அனேக வீடுகளின் வேலிகள் கூரைகள்  தூக்கியெறியப்பட்டுள்ளன

அது மட்டும் இல்லமல் தொடர்சியாக மந்தமான இருண்ட கால நிலையே கணப்படுகின்றது அத்துடன் கடல் மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.

 பெரும்பாலும் கடற்கரையோர மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வலியுறுத்தப்படுகின்றீர்கள்  மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.





மன்னார் மக்களையும் விட்டு வைக்காத கஜா புயல்........ Reviewed by Author on November 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.