கிளிநொச்சி மாவட்டத்தில் 41,317 பேர் பாதிப்பு! விபரங்கள் வெளியாகின -
மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் இப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5885 பேர் 19 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3,142 குடும்பங்களைச் சேர்ந்த 10,339 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும், 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 41,317 பேர் பாதிப்பு! விபரங்கள் வெளியாகின -
Reviewed by Author
on
December 26, 2018
Rating:
No comments:
Post a Comment