மன்னாரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா...படங்கள்
'மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுதல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்தல்' என்ற தொனிப்பொருளில் மன்னாரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா வியாழக் கிழமை (06.12.2018) மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் S .குணபாலன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் C.J.மோகன்றாஸ் பிரதம அதிதியாகவும், நானாட்டான் பிரதேச செயலாளர் M.சிறிஸ்கந்தராஜா மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் S.கேதீஸ்வரன், மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி. K.சிவசம்பு, மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J..பிறட்லி, மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றிய திட்ட
உத்தியோகத்தர் திருமதி. ஜெனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து
கொண்டனர்.
இவ் விழாவில் மாற்றாற்றல் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகள் உயர்தரம்,
சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசுப் பரீட்சைகளில்
சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் நாடகம், நடனம் போன்ற நிகழ்வுகளுடன்
பரதகலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடனமும் இவ் நிகழ்வில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் S .குணபாலன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் C.J.மோகன்றாஸ் பிரதம அதிதியாகவும், நானாட்டான் பிரதேச செயலாளர் M.சிறிஸ்கந்தராஜா மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் S.கேதீஸ்வரன், மன்னார் நகர் பிரதேச செயலாளர் திருமதி. K.சிவசம்பு, மன்னார் கல்வி வலயப் பணிப்பாளர் K.J..பிறட்லி, மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றிய திட்ட
உத்தியோகத்தர் திருமதி. ஜெனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து
கொண்டனர்.
இவ் விழாவில் மாற்றாற்றல் கொண்ட குடும்பங்களின் பிள்ளைகள் உயர்தரம்,
சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசுப் பரீட்சைகளில்
சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளின் நாடகம், நடனம் போன்ற நிகழ்வுகளுடன்
பரதகலாலய நாட்டியப்பள்ளி மாணவிகளின் நடனமும் இவ் நிகழ்வில் இடம்பெற்றது.
மன்னாரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா...படங்கள்
Reviewed by Author
on
December 07, 2018
Rating:
No comments:
Post a Comment