அண்மைய செய்திகள்

recent
-

256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு-தோண்டத் தோண்ட மேலும் பல எலும்புக்கூடுகள்


மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில்,   தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 05-12-2018 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

-மன்னார் நீதவான் ரி.சரவணராஜா   மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை  அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

இதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

-இன்றைய தினம் புதன் கிழமை காலை அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதன் காரணத்தினால் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.










256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு-தோண்டத் தோண்ட மேலும் பல எலும்புக்கூடுகள் Reviewed by Author on December 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.