அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா-முழுமையான படங்கள்

இந்து_கலாசார_அலுவல்கள்_திணைக்கள அனுசரணையுடன் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூசையும் அமரர் புலவர் திருநாவுக்கரசு அரங்கில் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையம் ஏற்பாடு செய்த 14 வது நாவலர் விழா நிகழ்வுகள் 15-12-2018 சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி தேச கீர்த்தி மஹா தர்மகுமாரக் குருக்கள் தலைமையில்  சனிக்கிழமை 15-12-2018 காலை 9 மணியளவில் நாவலர் திருவுருவ பவனியுடன் நாவலர் விழா ஆரம்பமானது.

 பிரதம விருந்தினராக 
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  செல்லத்துரை கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக

மன்னார் மாவட்ட இந்து மஹா சபை தலைவர் சி.இராம கிருஸ்ணன், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் மு.கதிர்காமநாதன் , மாவட்ட கலாசார உத்தியோகதர் இ. நித்தியானந்தன் ,ஆங்கில வளநிலைய முகாமையாளர் ச.சன்முகலிங்கம் , பதிவாளர்  கு. பவானந்தன், உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் ,கதாப்பிரசங்கம், சொல்லாடு களம், நடனம் போன்ற நிகழ்வுகளும்  நாவலர் விருது வழங்கல், இறை பணியாளர் விருது வழங்கல்,நிகழ்வுகளும் மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றத்தினால் வருடாவருடம் நடக்கும் கௌரவிப்பில் இம்முறையும்  அறநெறி ஆசிரியர்கள் 05 பேர்  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 -வை.கஜேந்திரன்-



























































































































மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா-முழுமையான படங்கள் Reviewed by Author on December 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.