அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள கேள்வி கோரலின் இடம் ஒதுக்கீடு-படங்கள்

எதிர் வரும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 306  தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், வர்த்தகர்களின் விண்ணப்பங்களுக்கு அமைவாக கூடிய கோள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கும் நடவடிக்கை இன்று 18-12-2018 செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

எதிர் வரும் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை   மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 306  தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

-வியாபார நிலையங்களை அமைக்க இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 2450  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

-குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் வைத்து திறந்த வெளியில் கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

-இதன் போது ஒவ்வெரு இடங்களுக்கும் அதி கூடிய கேள்வி கோரலை சமர்ப்பித்தவர்களுக்கு இடங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

-மன்னார் நகர சபையின் தலைவர் ஞ.அன்ரனி டேவிட்சன் தலைமையில் குறித்த விண்ணப்பங்கள் பரிசீலித்து இடம் ஒதுக்கும் நிகழ்வில் நகர சபை செயலாளர்,உறுப்பினர்கள், உற்பட விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

-வர்த்தக நிலையம் அமைக்க இடம் கிடைத்த வர்த்தகர்கள் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தற்காலிக வியாபார நிலையங்களை அமைக்க மன்னார் நகர சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள கேள்வி கோரலின் இடம் ஒதுக்கீடு-படங்கள் Reviewed by Author on December 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.