அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியா மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை! என்ன தெரியுமா?


பிரித்தானியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பனிப்பொழிவு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும் படி வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்திற்கு நாளை காலை உள்ளூர் நேரப்படி 10 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ள தகவலில், நாளை காலை பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்க கூடும் என்பதால், உயர்மட்டத்தில் இருக்கும் மக்கள் அதற்கு ஏற்ற வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்.

சாலையில் செல்லும் போது, கவனமாக செல்ல வேண்டும், பனிப்பொழிவின் காரணமாக ஜாக்கிரதை இல்லாமல் சென்றால், ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு வேல்ஸ் பகுதியியில் நாளை இரவு -7C வரை இருக்கும், நாளை இரவு முதல் செவ்வாய் கிழமை வரை குளிர் அதிகம் இருக்கும், அதே சமயம் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.
தங்களுடைய கணிப்பு படி திங்கள் முதல் செவ்வாய் வரை வெப்பநிலை -5c-யிலிருந்து -7c வரை இருக்கும்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய் கடுமையான மழை இருக்கும், அடுத்தவாரம் வடக்கு இங்கிலாந்தில் 70 கி.மீற்றர் வேகத்திற்கு காற்று வீசுவதற்கு கூட வாய்ப்புள்ளது என வானிலைமையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மக்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களையும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை! என்ன தெரியுமா? Reviewed by Author on December 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.