பாலியல் நடவடிக்கைகளால் வவுனியாவில் வேகமாக பரவும் கொடிய ஆபத்து -
வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் இம்முறை ஒவ்வொருவரும் தனக்கு எச்.ஐ.வி உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழிக்கலாம். வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.
அவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர்.
இந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது.
ஆனால், வவுனியாவை பொறுத்தவரை பாலியல் தொழில் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஒன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை.
அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.
பாலியல் நடவடிக்கைகளால் வவுனியாவில் வேகமாக பரவும் கொடிய ஆபத்து -
Reviewed by Author
on
December 01, 2018
Rating:
No comments:
Post a Comment