அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் பார்வையிழந்த 130 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிகிச்சை -


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையற்றவர்களாக காணப்பட்ட 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கண் பார்வை தொடர்பாக பல்வேறு குறைபாடுகளுடன் அதற்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு போதுமான நிதி வசதிகளின்றி இருந்த 130 பேருக்கு லண்டன் வாழ் மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்களின் அமைப்பின் ஊடாக இவ் இலவச சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
துறை சார்ந்த புலம்பெயர் தமிழ் வைத்திய நிபுணர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர்களும் இணைந்து மேற்படி சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களை பார்வையிட்டதுடன், குறித்த சத்திசிகிச்சைகளுக்கு உதவிய வைத்தியசாலை நண்பர்கள் அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மட்டக்களப்பில் பார்வையிழந்த 130 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிகிச்சை - Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.