அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 வருடங்கள். விஷேட வழிபாடு-படங்கள்

மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 ஆண்டு விழாவும் மன்னார் வேதசாட்சிகளின் 475ம் ஆண்டு யூபிலி ஆரம்ப விழாவும் நேற்று சனிக்கிழமை (26.01.2019) இறை வழிபாட்டுன் வெகு விமரிசையாக மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் அன்னை ஆலயத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ் விழாவினை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் அழைப்பின் பேரில் திருமலை மறைமாவட்ட ஆயர் மேதகு நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் மன்னார் தோட்வெளி வேதசாட்சிகளின் ஆலயத்தில்
காலை 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் வேதசாட்சிகளின் 475ம் ஆண்டு யூபிலி மற்றும் மன்னார் மறைமாவட்ட உதயமாகி 38வது ஆண்டு நிறைவு சின்னம் மேதகு ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகையால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

இவ் விழாவில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்கு தளங்களிலிருந்தும்
பெருந்தொகையான பக்தர்கள் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள்
அருட்சகோதரிகள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், அரசு, அரசு சார்பற்ற
நிறுவன அதிகாரிகள் என பலர்  இவ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 இவ் விழாவின்போது மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பங்குத் தளங்களும் இவ்வாண்டு மேற்கொள்ள இருக்கும் மேய்ப்பு பணி திட்டங்களை பங்கு மேய்ப்புப் பணி சபை பிரதிநிதிகளால் ஆயர் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டு அதற்கான ஆசீரையும் பெற்ற  நிகழ்வும் இடம்பெற்றன.
திருகோணமலை ஆயர் மேதகு நோயல் இம்மானுவேல் ஆண்டகை
-ஆயர் திருச்சுரூப ஆசீர் வழங்குவதையும.













மன்னார் மறைமாவட்டம் உதயமாகி 38 வருடங்கள். விஷேட வழிபாடு-படங்கள் Reviewed by Author on January 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.